Saturday, December 25, 2010

நட்பு

எனக்கு மட்டும் தெரிந்த உண்மை...




நான் உன்னிடம் பழகும்போது
காதலுடன்தான் பழகினேன்!


பிறகு உன் நட்பு எனக்கு புரிந்ததால்,
காதலை விட்டுக்கொடுத்துவிட்டேன்!

ஏன் என்றால்?

காதலுடன் பழகினால்,
பல கேள்விகளுக்கு விடை
தெரியாமல் போய்விடும்!

நட்புடன் பழகினால்,
கேள்விகள் அனைத்திற்கும்
நம்மிடமே விடை கிடை
த்துவிடும்!

எனக்கும்
விடை கிடைத்தது!

Friday, December 24, 2010

ஏக்கம்

அமைதியான என் வாழ்வில்!
அலைபோல் வந்து சென்றாள்...

அலையாய் வந்தது
என்னவோ அவள்தான்...

ஆனால்,
அலையாய் அடித்துக் கொண்டிருப்பது
என்னவோ என் மனம்தான்....

ஆனந்தம்!

ஒரு நொடிதான்
உன்னை பார்த்தேன்

உடனே மறைந்து விட்டாய்!

உன் உருவம்
அங்கிருந்து மறைந்து விட்டாலும்
 
என் உள்ளத்தில்
அப்படியே பதிந்து விட்டது...

இன்று பிறந்த நாள்!

அமைதியான அறையில் உறங்கிக்கொண்டிருந்தாய்!


இருளின் அழகையும், அமைதியின் வலிமையையும் உணர்ந்திருந்தாய்!


உருக்கமாய் உன்னை பத்திரமாக பார்த்துக்கொண்ட தாய்!


பத்து மாதங்கள் பொத்தி வைத்திருந்த உன்னை!


பதற்றத்துடன் இந்த பூமியிட் கிடத்தி விட்டாள் அன்னை!


நீன் வீரென்று வந்து மண்ணில் விழுந்தாய்!


விந்தையான இந்த உலகைக் கண்டு....
பயந்து விடாதே...

Thursday, December 23, 2010

புத்தாண்டு

கடந்த நாட்களை
கனிவுடன் நினைக்க!


நடந்து வந்த பாதையை
நாம் சற்றே திரும்பிப் பார்க்க!


அட எவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டோம்!



சென்ற காலங்களை பார்க்கும்போது...
நமக்கு நடந்த... நிகழ்ந்த....



தீயவைகளையெல்லாம் விட்டு விட்டு!
நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு!



இனி வரும் நாட்களை
இனிதே துவங்குவோம்!

தாமரை குளம்



எங்கள் இருவருக்கும்
சண்டையே வராதாம்!


எப்படி சொல்
கிறீர்கள்...?

சண்டையிட்டுக் கொண்டதால்தான்
நாங்கள் ஒ
ன்று சேர்வதே இல்லை...!

ஏமாற்றம்


உன்னை நினைத்து
கற்பனைகள் ஏராளம்!

உன்னை கண்டதும்

அனைத்தும் வீனாகும்

ஏன் என்கிறாயா?

ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாயே
அண்ணன் என்று....

பம்பரம்













விழுந்து விடுவேன்...
என்று தெரியும் எனக்கு...

இருந்தாலும்...
சுறுசுறுப்புடன் சுழல்கிறேன்....

சோம்பல் பிடிக்காததால்...