Friday, August 19, 2011

அழகு

விடியலை அழைக்கும் சேவல்...

கதிரவனைக் காண காத்திருக்கும் பனி...
 

பகலைப் பற்றிக் கொண்டிருக்கும் சூரியன்...
 

மாலையில் மதி மயக்கும் ஓசை...
 

இதமாய் வீசும் தென்றல்...
 

அழகாய் கூவும் குயில்...
 

இரவை நனைக்கும் நிலா...
 

நிலவைச் சுற்றிலும் நட்சத்திரம்...

 

இயற்கையின் நிகழ்வு
அனைத்துமே அழகு.....

Sunday, August 7, 2011

கவிதைத் துளிகள்...: அழகான அடிமை...

கவிதைத் துளிகள்...: அழகான அடிமை...

வெற்றி நிச்சயம்...




வாழ்கையில் வெற்றிபெற எத்தனையோ இருக்க.....

ஒரு முறை தோற்றதையே ஏன் நினைக்க வேண்டும்...

தோல்விகளை கண்டு துவண்டுவிடாதே....

துணிந்து போராடு...

தோல்விகளை அடுக்கி

படிகளாக மாற்றிவிடு...

படிகளையே பாதையாக்கிடு... 

பாதையை கொண்டு வெற்றிகண்டிடு...

Saturday, August 6, 2011

அழகான அடிமை...

சிரிப்பின் அழகிற்கும்...

குழி விழும் கன்னத்திற்கும்....

கூர்மையான பார்வைக்கும்...

ரோஜா இதழ் உதட்டிற்கும்...

உதட்டுடன் விளையாடும் நாவிற்கும்...

பதமாய் நீ கடிக்கும் நகத்திற்கும்...

தோடை அழகாக்‍கும் காதிற்கும்...

கருமை நிற கூந்தலுக்கும்...

வருடி செல்லும் துப்பட்டாவிற்கும்...

ஓசை தரும் கொளுசுக்கும்...

ஆசையுடன் சொல்லிக்கொள்கிறேன்..

மொத்தத்திற்கும் நான் அடிமை என்று...

Thursday, July 21, 2011

புதுமை அனுபவம்


ஒரு நொடியில்
உன் வசம் இழுத்த நினைவு...


எனக்குள்
இதுவரை இல்லாத உணர்வு...


உன் ஏக்கத்தில்
நான் காண்கின்ற கனவு...


உன்னை
கண்டதும் ஏற்படும் வியப்பு...


சொல்லத் தெரியவில்லை
புதுமை அனுபவத்தை

புரியவில்லை



உன் நினைவில் உறைகிறேன்...


தனிமையில் தவிக்கிறேன்...


நின்றால் தலையை தட்டும் வானம்...


நடந்தால் இரண்டாய் பிளக்கும் பூமி...


வடியும் கண்ணீரும் வற்றவில்லை...


நான் எங்கு செல்கிறேன்...


என்ன செய்கிறேன்...


ஒன்றுமே புரியவில்லை...

Sunday, July 3, 2011

நினைக்காத நேரமில்லை...



நான் உன்னை நினைக்காத நாள் இல்லை...


இல்லை இல்லை. நினைக்காத நேரமில்லை...



கனவாக கண்டு கொண்டிருக்கிறேன்
உன்னுடன் நான் வாழப்போகும் நாட்களை...


சுகமாக சுமந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடைய நினைவுகளை...


வெதும்பிக் கொண்டிருக்கிறேன்
உன்னை சந்திக்க முடியாததை நினைத்து...


விழிகளில் வழிந்து கொண்டிருக்கும்
கண்ணீரில் உணர்கிறேன்...


உன் பிரிவின் ஏக்கத்தை....

LOVE


பொய்களையே கண்ட என் வாழ்வில்..
 
உண்மையும் தெரிந்தது...
 
உன் உருவில்...

Saturday, February 26, 2011

இயற்கை


பூவானது தினமும் உதிர்ந்தாலும்...
மொட்டானது மலர்ந்து கொண்டே இருக்கும்...
பூப்பதும்... உதிர்வதும்...
இயற்கையின் அழகு...
இதுபோல்... தினமும்...
எழுவதும்... உழைப்பதும்...
நம் அனைவரின் அழகு...

Friday, February 18, 2011

அம்மா

விலை உயர்ந்த வார்த்தை
உன்னை அழைக்க மட்டும்...

பத்து மாதங்கள்
கருவில் சுமந்த உனக்கு...

குழந்தை கொடுக்கும்
முதல் பரிசு...

அம்மா...

சுனாமி




சற்றும் எதிர்பார்க்கவில்லை...
 
சாலையோரத்தில் சென்ற
 

என் சந்தனகட்டியை
 

சத்தம் இல்லாமல்
 

கொண்டு சென்ற
 

அந்த சுனாமியின்
 

சூழ்ச்சி அலை...

Saturday, February 12, 2011

தொடரும் மூன்றெழுத்து


பார்வை என்னும் மூன்றெழுத்தில் பார்த்து

அன்பு என்னும் மூன்றெழுத்தில் நெருங்கி
 
நட்பு என்னும் மூன்றெழுத்தில் இணைந்து
 
பாசம் என்னும் மூன்றெழுத்தில் பழகி
 
காதல் என்னும் மூன்றெழுத்தில் கலந்து
 
மணம் என்னும் மூன்றெழுத்தில் மணந்து
 
கடுமை என்னும் மூன்றெழுத்தில் உழைத்து
 
வாழ்வு என்னும் மூன்றெழுத்தில் வாழ்ந்து
 
இனிமை என்னும் மூன்றெழுத்தில் நனைந்து
 
சுடர் என்னும் மூன்றெழுத்தாய் ஒளிர்ந்து
 
இருள் என்னும் மூன்றெழுத்தில் சூழ்ந்து
 
முதுமை என்னும் மூன்றெழுத்தில் குளிக்கின்றோம்...

விடாமுயற்சி

தொடர் தோல்வியையே கண்ட
 
என் வாழ்விலும்
 
வெற்றி கிடைத்தது
 
விடாமுயற்சியால்

Thursday, January 13, 2011

வாலிப வயசு

வஞ்சத்தை எண்ணாத வயசு

வருவதை எதிர்கொள்ளும் வயசு

சுமையினை தாங்காத வயசு

யார் சொல்லும் கேட்காத வயசு

பொறுப்பினை ஏற்காத வயசு

பொய் பல சொல்கின்ற வயசு

சிகரத்தை அடைய நினைக்கும் வயசு

சிலர் சீரழிந்து போகின்ற வயசு

வாலிப வயசு

புரிந்து கொள்ள முடியாத தினுசு

காதல்


பகலுக்கென சூரியன்

உண்டு பிரகாசமாய்


இரவுக்கென சந்திரன்
உண்டு ஒலியாய்


காக்கைக்கென கூட்டம்
உண்டு அழகாய்


குருவிக்கென கூடு
உண்டு சுகமாய்


மரத்திற்கென காற்று
உண்டு இதமாய்


இதைப்போல்,

எனக்கென்று மனம்
உண்டு காதலாய்


அதில் உனக்கென இடம்
உண்டு முழுதாய்

காதல் கண்ணீர்

உன்னை வாழ்த்த மனமில்லை!

உன்னை நினைக்காமலிருக்க முடியவில்லை!

உன்னை மறக்கவும் முடியவில்லை!

உன்னோடு வாழவும் வழியில்லை!

ஆதலால்,

நீன் மணவறையில் இருக்கும்
அதே வேளையில்


நான் கல்லறையி்ல்.....

Wednesday, January 12, 2011

மீண்டும் காதல்!


முழு நிலவாய்
இருந்த என்னை

சுவடே இல்லாமல்
அழித்து விட்டது அவள் காதல்!

மீண்டும் காதலிக்கிறேன்
முழு நிலவாய் ஆவதற்கு!

ஆசையில் ஓர் கடிதம்




இணைந்திருந்தோம் இந்நாள் வரை

நம் நடுவே வந்துள்ளது பிரிவெனும் தடை

பிரிவு என்பது தற்காலிகம்!

நட்பு என்பது நிரந்தரம்!

மாற்று தேசம் சென்றாலும் மறக்காதது நட்பு!

மரணம் வந்தாலும் மறையாதது நட்பு!

நம் நட்பின் அழகையும், ஆழத்தையும்,

அதிகப்படுத்தவே இந்த பிரிவு!

என் அன்பு நண்பனுக்கு

ஆசையில் ஓர் கடிதம்!

தாயின் பிரிவு



கருவில் சுமந்த
கனி அமுதே!


பாலூட்டி வளர்த்த
பவளக்கொடியே!


என்னை காத்த
கடவுளே!


ஆதரவாய் இருக்க
வேண்டிய நீயே!


என்னை மட்டும்

இந்த பூமியில் தனியாய்
தவிக்க விட்டு சென்றுவிட்டாயே!
பத்து மாதம்
சுமந்தாய் என்னை!

உன் சொர்க்கத்தில்
சுகமாய் சுருண்டுக் கிடந்தேன்!


வெளிவராத என்னை
கிழித்து எடுத்தனர்!


பிறக்கும் போதே
ஆயுதத்தை காட்டிவிட்டனரே!


நான் என்ன செய்வது?


தொட்டில் பழக்கம்
சுடுகாடு வ‌ரைக்கும்!

என்னவள்



காலைப் பனியும் சுடுகிறது...

கரும்புச் சாரும்
கசக்கிறது...

தண்ணீரும்
தெவிட்டுகிறது...

என்னவளின் கடைக்கண் பார்வைப்
படாததால்!

Saturday, January 8, 2011

மலரின் குரல்



செடியில்
ஒன்றாய் இருந்த நம்மை,

வெட்டிப் பிரித்து விட்டார்கள்!

இனி நானும்
வாழா வெட்டிதான்!

ஆனந்த கண்ணீர்



நானும் பாக்கியசாலிதான்!

பிறந்த
குழந்தையைக் கண்ட தாயின்
 
பேரானந்தக் கண்ணீரால்!

மரணம்


அன்று கருவறையில்
இருந்தபோது கிடைத்த
அதே கதகதப்பு...

இன்று
கல்லறையில்...

ஆம்...
நான் மீண்டும்
தாயிடம் சென்றுவிட்டேன்!

காதல்


புதையல்
தேடிச்சென்ற இடத்தில்....

புதைக் குழியில்
விழுந்துவிட்டேன்....

காதல் தோல்வி


அவள் பெயரை
என் இதயத்தில்
எழுதிவைத்துள்ளது
தெரியவில்லையாம்...

சரிதான்...

ரத்தத்தில் எழுதியது...
என் தவறுதானே...

Thursday, January 6, 2011

அழகுத் தாய்


கறந்த பாலை
கிண்ணத்தில்
கலந்துகொண்டிருக்கிறாள்!

குழந்தையின்
அழுகையை
அடக்க அல்ல!

தன்னுடைய
அழகு நிலைக்க!

அழகுத் தாய்!

விதவை

காலம் முழுவதும்
நான் வைத்துக் கொள்ள
நினைத்ததை...

நேற்று வந்தவன்
பறித்துச் சென்று
விட்டான்...

வேதனையான
விதவையின் வாழ்க்கை!

Chicken

பொத்தி வைத்தவள்
பெற்றெடுத்ததாலே

பெற்றுக்கொண்டவர்
தட்டிதட்டி உடைத்தாலே

நான்
கருக்கலைந்து நிற்கிறேன்
கருந்தகட்டுக்குள்ளே!

காகிதக் கப்பல்


விதியுடன் விளையாட
நேரம் வந்துவிட்டது!

நான்காய் மடித்து
நடுவில் பிரித்து விட்டார்கள்!

என் மரணப்
பயணத்தை தொடர்கிறேன்!

குழந்தையின் குரல்

கருவறையை விட்டு
கல்லறை நோக்கி

இனி
எத்தனை காலம்
பயணிக்கப் போகிறேன்?

உனக்காக

எனக்காக...

தாயிடம் தகராறு செய்தாய்

தந்தையிடம் அடிவாங்கினாய்

அண்ணனிடம் வாதாடினாய்

அக்காவிடம் ஆதரவு கேட்டாய்

இப்படி எனக்காகவே நீ இருக்க

நான் என்றும் உனக்காக...

Tuesday, January 4, 2011

ஆள்காட்டி!













உழைக்கும் கரத்தில்
ஒன்றியிருந்தாலும்!

உன்னை மட்டும்
வெறுக்கிறேன்!

நீ ஆள்காட்டியானதால்!

முத்தம்

ஒரு நொடியில்
உடல் முழுதும்
வியர்த்தது!

வியர்க்காத இடத்தில்
நீ கொடுத்த
முத்தத்தால்!