Monday, February 27, 2012

பலரது நிலைமை...

உன்மேல் காதல் என்றேன்
காது​கொடுத்தும் கேட்கவில்லை...
 

கடிதத்தில் தெரிவித்தேன்
கடுகளவும் கண்டுகொள்ளவில்லை...
 

ரத்தத்தில் எழுதினேன்
சத்தம் கூட காட்டவில்லை...
 

விழைந்து வந்து விடைகேட்டேன்
பதிலொன்றும் சொல்லவில்லை...
 

வேறு வழியின்றி
சத்தமின்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்...
 

கல்லறைக்கு வந்து
கண்ணீருடன் சொல்கிறாய் காதலை...