Thursday, July 21, 2011

புதுமை அனுபவம்


ஒரு நொடியில்
உன் வசம் இழுத்த நினைவு...


எனக்குள்
இதுவரை இல்லாத உணர்வு...


உன் ஏக்கத்தில்
நான் காண்கின்ற கனவு...


உன்னை
கண்டதும் ஏற்படும் வியப்பு...


சொல்லத் தெரியவில்லை
புதுமை அனுபவத்தை

புரியவில்லை



உன் நினைவில் உறைகிறேன்...


தனிமையில் தவிக்கிறேன்...


நின்றால் தலையை தட்டும் வானம்...


நடந்தால் இரண்டாய் பிளக்கும் பூமி...


வடியும் கண்ணீரும் வற்றவில்லை...


நான் எங்கு செல்கிறேன்...


என்ன செய்கிறேன்...


ஒன்றுமே புரியவில்லை...

Sunday, July 3, 2011

நினைக்காத நேரமில்லை...



நான் உன்னை நினைக்காத நாள் இல்லை...


இல்லை இல்லை. நினைக்காத நேரமில்லை...



கனவாக கண்டு கொண்டிருக்கிறேன்
உன்னுடன் நான் வாழப்போகும் நாட்களை...


சுகமாக சுமந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடைய நினைவுகளை...


வெதும்பிக் கொண்டிருக்கிறேன்
உன்னை சந்திக்க முடியாததை நினைத்து...


விழிகளில் வழிந்து கொண்டிருக்கும்
கண்ணீரில் உணர்கிறேன்...


உன் பிரிவின் ஏக்கத்தை....

LOVE


பொய்களையே கண்ட என் வாழ்வில்..
 
உண்மையும் தெரிந்தது...
 
உன் உருவில்...